முத்துப்பேட்டையில் குப்பை சேகரிக்கும் வண்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள் வீண்

Posted September 22, 2016 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை, செப். 22:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் முறையாக பயன்படுத்தாமல் பலலட்ச ரூபாய் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் தொட்டிகள், வண்டிகள் வீணாகிவிட்டன.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த 5 ஆண்டில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூட முன்னுரிமை கொடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பேரூராட்சி அலுவலகத்தையே அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத நிலை உளளது.
உதாரண மாக சமீபத்தில் 18 வார்டுகளிலும் குப்பை சேகரிக்க பல லட்சம் மதிப்புள்ள வண்டிகள் வாங்கப்பட்டது. இவை பயன் படுத்தப் படாமல் அலுவலகத்தின் பின் புறம் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த வண்டிகள் ஒவ்வொன்றாக வீணாகி வருகின்றன. அதே போல் வார்டுகளுக்கு வாங்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் பயன்படுத்தப் படாமல் பேரூராட்சி அலுவலகத்தில் ஆங் காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. பேரூராட்சி அலுவலக பின்புறம் பழுதடைந்த நிலையில் பயன் பாட்டில் இல்லாத கழிப்பறை ஒன்று உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் இந்த கழிப்பறையை பேரூராட்சி நிவாகம் சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை அடுக்கி வைக்க பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி முன்புறம் மின் சாதன பொருட்கள் வைக்கும் சிறிய கட்டிடம் உள்ளது. அதுவும்ம் பராமரிக்கப்படாமல் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வருகிறது. அதன் மின்சார இணைப்பு மெயின் போர்டுகள் சிறுவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
அதே போல் பல லட்சத்தில் உயர் கோபுரவிளக்குகளை சரி செய்ய வாங்கப் பட்ட அலுமினிய ஏணி ஓரத்தில் வீணாகி வருகிறது. குப்பைகள் சேகரிக்கும் மினி டிராக்டர் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் சிறு பழுதாகி நிறுத்தப்பட்டது. முறையாக பராமரிக்காததால் அது வீணாகி எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. அதே போல் அலுவலகவளாகத்தில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியை ஏற்படுத்திவருகிறது'

இது குறித்து சமூக ஆர்வலர் முகமது மாலிக் கூறுகையில்,
தமிழ் நாட்டில் ஒரு மோ மான பேரூராட்சி நிர்வாகம் என்றால் அது இந்த பேரூராட்சி நிர்வாகம்தான். இதை இது வரை தமிழக முதல்வர் கண்டுகொள்ளாதது வேதனையான ஒரு விஷயம். 5 ஆண்டுகளில் பெயர் சொல்லும் அளவில் எந்த ஒரு மக்கள் பணியும் செய்யவில்லை.ஆனால் நிதி மட்டும் விரயம் செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி வளாகம் முழுவதும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாகி அலுவலகம் அலங்கோல மாக உள்ளது என்றார்.

news தினகரன்




0 comment(s) to... “முத்துப்பேட்டையில் குப்பை சேகரிக்கும் வண்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள் வீண்”