பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்- கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

Posted September 23, 2016 by Adiraivanavil in Labels:

அன்றைய பெண்கள், நாள்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு  வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம்

அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத் தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக் கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண் களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரிய க்கூடாது.
அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து கொடுக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இளம்தேங்காயி லிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பத ன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப் பட்டது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், 

1. மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும்.

2. முடியின் நுனிப்கதியில் பிளவு தோன்றாது.
3. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது.
4. கூந்தலின் ஆரோக்கியத்தை இயற்கையாகவே தூண்டும்
5. கூந்தலின் மினுமினுப்பு தன்மையைக் கூட்டும்
6. முடியின் வேரில் பலத்தை கொடுப்பதால், முடி கொட்டாது.
எந்த பிரச்சனைகளும்இல்லாத கூந்தல், இயற்கையா கவே ஆரோக்கியமாக வளரும்தானே கூந்தல் என்பது 1 வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு உடைந்து உதிர்ந்துகொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெ யோ , ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்த லும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
.
=> அகிலாண்டேஸ்வரி


0 comment(s) to... “பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்- கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்”