அதிராம்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் -லாரி மோதி படுகாயம்
Posted September 14, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரும், பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலைய ஏட்டு ரவிச்சந்திரன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையை அடுத்த மண்டகப்படி என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் காலில் படுகாயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் ரவிச்சந்திரன் லேசான காயம் அடைந்தார். இவர்கள் 2 பேரும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் -லாரி மோதி படுகாயம்”