அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அளந்து குறியீடு
Posted September 27, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், மற்றும் ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீடுகள் மற்றும் கடைகள், சி.எம்.பி.வாய்க்கால் பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பற்றி பொது மக்கள் பல பேர்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் செய்து வந்தனர். புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 9.00 மணிக்கு ஆக்கிரமிப்பு பணி துவங்கியது. முதலில் அதிராம்பட்டினம் பகுதியில் ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கின. ஆனால் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்ப்பட்டு தலைமை நில அளவையர் அளந்து அம்புக்குறியீட்டு சென்றனர். இந்த ஆக்கிரமிப்பு பணியில் பட்டுக்கோட்டை கோட்டாச்சிரியர் இரா.கோவிந்தராசு. தாசில்தார்; ரவிச்சந்திரன். முதுநிலை வருவாய் ஆய்வாளர் தர்மந்திரா, வருவாய் ஆய்வாளர் இராஜகுமாரி. பொதுப்பணித்துறை அதிகாரி செல்வராசு. நிலசர்வேயர்கள் மாரிமுத்து செல்வகுமார். தங்கராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திலக் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளந்து குறியீடு செய்தனர்
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அளந்து குறியீடு ”