அதிரையில் நடைபெற்ற 4-வது ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி-(வீடியோ இணைப்பு)

Posted September 18, 2016 by Adiraivanavil in Labels:


 அதிராம்பட்டினத்தில் ஈத் மிலன் கமிட்டி சார்பாக வருடந்தோறும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி  பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 2013 வருடத்திலிருந்து; அனைத்து சமுதாய  மக்களின் பேராதரவினாலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் தற்போது நடைபெற்ற  பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு மற்றும் அனைத்து சமுதாய மக்களோடு விருந்தோம்பல் நிகழ்ச்சியும்; சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா. முஹம்மத் அப்துல் காதிர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் திரு. பாரதி கிருஷ்ண குமார் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த ஹபீப் முஹம்மத் அவர்கள் சிறப்பு  சொற்பொழிவாற்றி அனைவரின் கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கடந்த மாதம் அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவிற்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் செய்து அஹ்மது கபீர் அவர்கள் நன்றியுரையுடன் அனைத்து சமுதாய மக்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.












0 comment(s) to... “அதிரையில் நடைபெற்ற 4-வது ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி-(வீடியோ இணைப்பு)”