அதிராம்பட்டினம் கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா !
Posted February 16, 2016 by Adiraivanavil in Labels: அதிரை நகர் வலம்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அருள்மிகு அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளன. இந்த திருக்கோவிலில் சிவப்பெருமான் கிழக்கு நோக்கிலும், சுந்தரநாயகி அம்மன் தெற்கு நோக்கிலும் இருந்து அருள் புரிந்து வருகின்றனர். இத்திருத்தலம் திருவாதிரை நட்சத்திர பரிகார தலமாக இருந்து வருகின்றன
.திருவாதிரை நட்சத்திரகாரர்கள் பல பேர்; வெளி ஊர்களிருந்து வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு சாமி பெயரில் சுந்தரநாயகிபுரம் என்ற தனிக் கிராமமே உள்ளன. மேலும் பல்வேறு ஊர்களிலும் கோவில்; நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.இந்த கோவிலை சுற்றிலும் உள்ள பல கடைகளில் இருந்து வருமானம் வருகின்றன. இந்நிலையில் கோவிலின் அருகில் ஒரு பெரிய குளம் உள்ளன. இந்த குளமானது அதிவீரராமன் என்னும் மன்னன் காலத்திலிருந்து இருந்து வருகின்றன. இந்த குளத்தில் இருந்துதான் தண்ணீர் எடுத்து கோவிலை சுத்தம் செய்தனர்கள். மேலும், இந்த கோவிலின் குளத்தில் அய்யர்கள்,குருக்கல், பண்டாரங்கள் குளித்து வந்ததாக பொது மக்கள் சொல்கின்றனர். இக்குளத்தில் படித்துறைகள் தற்போதும் இருக்கின்றன. தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டு சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் பூஜைகள் நடக்கின்றன. இதில் குளம் மாசு அடைந்து கோரை புல்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் குளத்தில் துர் நாற்றம் வீசுகின்றன.ஆகவே தற்போது வருகின்ற பங்குனிஉத்திரத்தில் கோவில் திருவிழா நடைப்பெற இருப்பதால் உடனே குளம் சுத்தம் செய்து கோரை புல்களை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.0 comment(s) to... “அதிராம்பட்டினம் கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா !”