மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்

Posted February 16, 2016 by Adiraivanavil in Labels:



பேராவூரணி பிப்ரவரி-16;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கவிழா நடைபெற்றது.பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா பள்ளி தலைமையாசியர் கஜானா தேவி தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர்கள் ஜமால் மைதீன், ஏ.முருகேசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் காளீஸ்வரி வரவேற்றார். பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி அசோக்குமார் முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ஆசிரியர்கள் கார்த்திகேயன், மகேஷ்வரி, ரெங்கேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை முத்துமாரி நன்றி கூறினார். பாந்தகுளம் மற்றும் பள்ளி வளாகத்தை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர்.


0 comment(s) to... “மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம் ”