100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்ககில் செலுத்தப்படும்
Posted February 03, 2016 by Adiraivanavil in Labels: இந்தியா
100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளம், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, மத்திய அரசின் சார்பில் டெல்லியில் விழா நடத்தப்பட்டது. விழாவில் பேசிய மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங், 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு பகுதியை இடைத்தரகர்கள் பிடித்து கொள்வதாக புகார் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஏப்ரல் 1ந் தேதியில் இருந்து, 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்காக வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிதி மேலாண்மை முறை கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் தெரிவித்தார்.
0 comment(s) to... “100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்ககில் செலுத்தப்படும்”