ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.1,500 செலுத்தி 3 நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம்

Posted February 04, 2016 by Adiraivanavil in Labels:
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 1,500 ரூபாய் செலுத்தி 3 நாட்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தட்கல் முறைப்படி 3,500 ரூபாய் கட்டணம் செலுத்தி மூன்று நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம் என்று கூறினார். 

மேலும் காவல்துறை சோதனை நடத்தும் போது ஆவணங்களை உடனடியாக அனுப்ப வசதியாக புதிய செயழி ஒன்றும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் பாலமுருகன் கூறினார். 

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு பாஸ்போர்ட் இழந்த 3,970 பேருக்கு இதுவரை மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், மாற்று பாஸ்போர்ட் பெற  பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்றும் கூறினார்.
  
News7 Tamil


0 comment(s) to... “ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.1,500 செலுத்தி 3 நாட்களில் பாஸ்போர்ட் பெறலாம்”