பட்டுக்கோட்டை அருகே பள்ளி வேன் மோதி 1½ வயது குழந்தை பலி
Posted February 04, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி.இவரது மகள் ஓவியா (வயது 1½). நேற்று மாலை இக்குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது பள்ளி வேன் அங்கு வந்தது. அதில் இருந்து பள்ளி குழந்தைகள் இறங்கினார்கள். அவர்கள் இறங்குவதை மட்டுமே பார்த்து டிரைவர் சித்திர வேலு வேனை எடுத்தார்.
இதனால் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. குழந்தை மீது வேன் மோதியது.இதில் குழந்தை பலத்த காயம் அடைந்தது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் குழந்தை ஓவியா பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சித்திரவேலுவை கைது செய்தனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே பள்ளி வேன் மோதி 1½ வயது குழந்தை பலி”