ஜப்பானில் ரோபோக்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் விவசாய பண்ணை
Posted February 04, 2016 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
உலகிலேயே முதன்முறையாக ரோபோக்களை மட்டுமே கொண்டு விவசாய பண்ணையை ஐப்பான் உருவாக்குகிறது.
ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த ஜப்பான் களமிறங்கியிருக்கிறது.
விதைப்பதை தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் இந்த பண்ணை செயல்பாட்டுக்கு வருகிறது.
அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் 2035ம் ஆண்டுக்குள் ஜப்பானில் செய்யப்படும் பணிகளில் பாதி வேலைகள், ரோபோக்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
0 comment(s) to... “ஜப்பானில் ரோபோக்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் விவசாய பண்ணை”

