அதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து 4 மாடுகள் பலி
Posted February 04, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் (31ந் தேதி) மூன்று மாடுகளும், மகிழங்கோட்டை மேலக்காடு கிராமத்தில் ஒரு மாடும் ஆக மொத்தம் நான்கு மாடுகளை நாய்கள் கடித்து குதறியது. இதில் மாடுகள் செத்தன. இதுப்பற்றி விபரம் கீழத்தோட்டம் கிராமத்தில் சித்தையன் என்பவருக்கு மூன்று மாடுகளும், மகிழங்கோட்டை கிராமத்தில் உள்ள தனவள்ளி என்பவருக்கு ஒரு மாடும் செத்தன. திடிரென்று பார்த்தால் நாய் கடித்து குதறி செத்து கிடந்தன. இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை பா.ஜ.கட்சியின் ஒன்றிய செயலாளர்; பால்ச்சாமி அவர்கள் கூறியதாவது, அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நாய் தொல்லைகள் அதிகரித்து உள்ளன. இதனால் காலையில் நடைப் பயிற்சி செய்வர்கள் கஷ்டத்தில் நடந்து செல்கின்றனர். இவர்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கீழத்தோட்டம் மற்றும் மகிழங்கோட்டை மேலாக்காடு கிராமத்தில் நான்கு மாடுகள், அதாவது 2 காளை மாடுகள் 2 பசு மாடுகளை நாய் கடித்து குதறியதில் பரிதாபம்மாக செத்து கிடந்தன. இதுப்போன்ற கொடிய செயல்கள் நடப்பதால் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து 4 மாடுகள் பலி”