பட்டுக்கோட்டையில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
Posted September 03, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சுபாஷ் (வயது 23) எலக்ட்ரிசியன். அதே தெருவை சேர்ந்தவர் உசேன் மகன் அப்துல்அஜீஸ் (வயது 23). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை
6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு காளியம்மன் கோவில் எதிரில் சுபாசும், அப்துல்அஜீசும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜாகீர் அவருடைய நண்பர்கள் தர்மராஜ், மாரிமுத்து விக்னேஷ் ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து வழி மறித்து சுபாஷ், அப்துல்அஜீஸ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் ஜாகீர், தர்மராஜ் மாரிமுத்து, விக்னேஷ் ஆகிய 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.நன்றி தினத்தந்தி0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு”