அதிராம்பட்டினம் அருகே கோயில் குளத்தில் மூழ்கி சென்னை காவலர் சாவு
Posted September 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே கோயில் குளத்தில் செவ்வாய்க்கிழமை குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்
புதன்கிழமை (செப். 3) நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலப் பாதுகாப்புப் பணிக்காக சென்னை வீரபுரத்திலிருந்து தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் 75 பேர் வந்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே பரக்கலக்கோட்டையில் தங்கியிருந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள கோயில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராஜாமுகமது (32) என்ற காவலர் நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே கோயில் குளத்தில் மூழ்கி சென்னை காவலர் சாவு”