அதிரை அருகே வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் வழிபாடு

Posted September 23, 2014 by Adiraivanavil in Labels: ,
செப்.23–
அதிரை அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேலத்தெரு பேருந்து நிலையம் அருகில் உள்ள வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதாக கூறி பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு
முன் ஸ்ரீ சம்பகமூர்த்தி சிவன் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் விளைவாகவே இந்த வேப்பமரத்தில் பால்வடிவதாக அந்த பகுதி மக்கள் கூறி அந்த மரத்திற்கு பட்டு சார்த்தி பூ வைத்து மஞ்சள் தடவி வழிபாடு நடத்தி வருகின்றனர். நூறுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வந்து வழிபாடு நடத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த வேப்ப மரத்தில் பால் வடிவதால் அதற்கு சக்தி வேம்பு அம்மன் என பெயரிட்டுள்ளனர்.இது பற்றி விவசாயத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற சேவியரை தொடர்புகொண்டு கேட்டபோது, வேப்பமரம் என்பது இயற்கை வழங்கிய மருந்தகம் என கூறுவார்கள். காரணம் அதன் இலை, காய், பழம், பட்டை என அனைத்தும் மருத்துவக்குணம் நிறைந்தது. ஆனால் அதில் வரும் பால் அருந்தக்கூடியது அல்ல. அந்த இடத்தில் அந்த பிசினை உட்கொள்ள வரும் பூச்சிகள் இறந்து மக்கி போகும் நிலையில் தொடர் மழை பெய்யும் காலங்களில் மரத்தில் இருந்த வடியும் பிசின் வேதியியல் மாற்றத்தினால் வெள்ளை நிற திரவமாக மாறி வடியும்.
இதில் பாலிற்கு தேவையான குளுக்கோஸ் போன்ற எந்த சத்துப்பொருளும் இருப்பதில்லை. மேலும் பாலூட்டி வகைகளில் இருந்து சுரக்கும் பாலிற்கு மட்டுமே உட்கொள்ளும் தகுதி இருக்கிறது என்று கூறினார். நன்றி மாலைமலர்


0 comment(s) to... “அதிரை அருகே வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் வழிபாடு”