முத்துப்பேட்டையில் கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு

Posted September 24, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சின்னாங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ப. சிவக்குமார் (40), மீனவர். இவர் செவ்வாய்க்கிழமை காலை படகில் மீன் பிடிக்கச் சென்றார். முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த
போது, படகிலிருந்து தவறி விழுந்த சிவக்குமார் நீரில் மூழ்கி இறந்தார்.
பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.thinamani


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு”