அதிரையை அடுத்து குடிபோதையில் பஸ் ஒட்டியதை கண்டித்த வாலிபர் மீது தாக்குத
Posted September 28, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மாலை மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு காமராஜர் புரத்தைச் சேர்ந்த மாசிலாமணி (45) என்பவர் அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி கடைவீதியில், பஸ் வந்த போது குடிபோதையில் இருந்த அரசு பஸ் டிரைவர், பஸ்சை தாறுமாறாக ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்த முயன்றதாக
கூறப்படுகிறது. இதனை முத்து (42) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் மாசிலாமணி பஸ்பாடி கிளினிங் கட்டையால் முத்துவை தாக்கி உள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்து கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.news malaimalar
0 comment(s) to... “அதிரையை அடுத்து குடிபோதையில் பஸ் ஒட்டியதை கண்டித்த வாலிபர் மீது தாக்குத”