அதிரையில் கடைகள் அடைப்பு தீர்ப்பு எதிரொலி: கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

Posted September 27, 2014 by Adiraivanavil in Labels: ,
 தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில்
முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று பிற்பகல் அதிரை பேரூந்து நிலையத்தில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.


திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் சில கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. டேக்ஸி ஸ்டாண்டு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.


அதிரை நகரில் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி கேபிள் சானல்களின் ஒளிப்பரப்பிலும் தடை ஏற்பட்டுள்ளது




0 comment(s) to... “அதிரையில் கடைகள் அடைப்பு தீர்ப்பு எதிரொலி: கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]”