பேராவூரணி பகுதி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
Posted September 30, 2014 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி பகுதி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான முகாம் ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு தலைமையாசிரியர்
பி. இளங்கோவன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி. சுந்தரராஜன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மு. பொக்கிஷம் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் முகாமை தொடக்கி வைத்தார். இதில் வட்டாட்சியர் வே. மாணிக்கவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்ற முகாம் அந்தோனியார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளித் தாளாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப் முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை அருளானந்த் அடிகள் முகாமை தொடக்கி வைத்தார்.
0 comment(s) to... “பேராவூரணி பகுதி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்”