பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது நடிகர்கள் பங்கேற்ப்பு-படங்கள்இணைப்பு
Posted September 24, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் நேற்று மாலை 6 மணியளவில் முனைவர் பு.சாரோன் இயக்கி வெளியிட்ட கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய 2.30 மணி நேரம் ஓடக்கூடிய குறும்படம்
வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். குறும்படத்தினை இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் பெற்றுக்கொண்டர்.இந்த விழாவில் நடிகர் ராஜேஷ், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ ரெங்கராஜன், நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, டாக்டர் செல்லப்பன், டாக்டர் அசோகன், தனபால் , பத்திரிக்கையாளர் ஸ்டாலின் குணசேகரன், பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா உள்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் பேசிய இயக்குனர் பு. சாரோன் கூறும் போது நான் பட்டுக்கோட்டையில் பிறக்காவிட்டாலும் என் தந்தையின் வார்த்தைகள் மூலம் பட்டுக்கோட்டையார் என மனதிற்குள் பதிந்துவிட்டார். மறைந்த ஒரு கவிஞர் பற்றி குறும்படம் எடுக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம், எதிர்கால சந்ததிக்கு உயரிய கருத்துக்களை விட்டுசென்ற ஒரு மாபெரும் கவிஞனின் வாழ்க்கை வரலாற்றை நான் பதிவு செய்ய வேண்டும் என்கிற வேட்கை தான் காரணம் . கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியாக மிக கஷ்டப்பட்டதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஆனால் கவிஞருடன் தொடர்புடைய சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர்களிடம் உள்ள சில அடையாளங்களை கேட்ட போது முதல் நாள் நன்றாக பேசுவார்கள் மறுநாள் வாயிலில் நிற்கும் நபர் ஒரு தொகையினை கூறி அதனை தந்தால் தான் அந்த ஆவனங்களை தர முடியும் என்பார். என்னால் அப்போதைக்கு அந்த தொகையினை கொடுக்க முடியாததினால் சில ஆவனங்களை இதில் கொண்டுவர முடியாமல் போனது.ஒரு ஆண்டு கல்லூரியில் விரிவுரையாளராகா பணியாற்றி அந்த பணத்தை கொண்டு படம் எடுப்பது, பணம் முடிந்த உடன் திரும்ப வேலைக்கு செல்வது என மிக கஷ்டப்பட்டு சுயமரியாதைக்கவிஞரின் குறும்படத்தினை எடுக்க சுயமரியாதையை இழந்து இந்த படத்தினை தயாரித்துள்ளேன். ஏழு ஆண்டுகளாக பட்டுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்கி, பட்டுக்கோட்டையாருடன் பழகிய, சந்தித்த, உறவுமுறையில் தொடர்புடையவர்கள் , சினிமா உலகில் அவருடன் பழகியவர்கள் என ஒவ்வொருவராக தேடி தேடி கிட்டத்தட்ட 120 மணி நேரம் பதிவு செய்யப்பட்ட பதிவுகளில் முக்கியமானவற்றை பிரித்து எடுத்து 2.30 மணி நேரத்திற்குள் கொண்டுவந்துள்ளதாக கூறினார். முடிவில் புலவர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.செய்தி பட்டுக்கோட்டைநியூஸ்டைம் படம்அதிரைவானவில்0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது நடிகர்கள் பங்கேற்ப்பு-படங்கள்இணைப்பு”