அதிராம்பட்டினத்தில் காட்டற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
Posted September 18, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நசுவினிஆறு அக்னிஆறு ஆகிய காட்டாறுகளிலிருந்து வரும் தண்ண{ர் கடலில் கலந்து வீணாகி வருவதால் காட்டற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் நசுவினிஆற இது வலது இடது என இரு பிரிவுகளாக சென்று கடலில் கலக்குகிறது இதில் வலது
புறமாக பொன்னவரான்கோட்டை அனைக்காடு பழஞ்சூர் அதிராம்பட்டினம் வழியாகவும் இடது புறமாக வென்டாகோட்டை துவரங்குறிச்சி தாமரங்கோட்டை சுந்தரநாயகிபுரம் வழியாகவும் வருகிறது இடது புறம் வரும் நசுவினிஆற்று வாய்க்காலில் 15 ஏரிகளிலிருந்து வரும் தண்ணீரும் இந்த ஆற்றில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மழைகாலங்களில் காட்டாற்றிலிருந்து நிரம்பி வரும் ஏராளமான தண்ணீர் வீணாக கடலுக்குச்சென்று கலந்துவிடுகிறது மேலும் காட்டாறுகளிலிருந்து மணல் கொள்ளை போவதால் ஆறுகளில் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆறுகள் கடல் மட்டத்தைவிட கீழே சென்று விடும் நிலை ஏற்பட்டுள்ளது இதனையடுத்து காட்டாறு தண்ணீரை சுற்றிவுள்ள கிராமமக்கள் குடிநீர்தண்ணீராக பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் கடலில் ஒருசில நேரங்களில் கடலில் பெருக்கு ஏற்பட்டு கடல்நீர் வெளியேறி காட்டாற்றில் கலந்து விடுகிறது இதானல் விவசாயத்துக்கும் குடிதண்ணீருக்கும் பயன்படும் காட்டாறு தண்ணீர் உப்புத்தண்ணீர் ஆகிவிடுகிறது இதனால் விவசாம் பாதிக்கப்படுவதோடு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை உள்ளது எனவே உடனடியாக நசுவினிஆறு அக்னிஆறு ஆகிய கடலில் சென்று கலக்கும் காட்டாறுகளின் குறுக்கே அணைக்கட்டவேண்டும் இவ்வாறு அணைகட்டுவதால் வீணாக ஆற்றுநீர் கடலில் கலப்பதை தவிர்க்கவும் கடல் பெறுக்கின்போது கடல் தண்ணீர் ஆறுகளில் கலக்காமல் இருக்கவும் செய்யும் என்றுளூ விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் 0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் காட்டற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை ”