பட்டுக்கோட்டையில்கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் பொதுமக்களின் கருத்து பதிவு செய்ய குறிப்பேடு கலெக்டர் தகவல்

Posted September 13, 2014 by Adiraivanavil in Labels:

 பட்டுக்கோட்டையில் உள்ள கல்யாணசுந்தரம் மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்களின் கருத்து களை பதிவு செய்ய குறிப் பேடு வைக்க உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை நக ருக்கு அழகு சேர்க்கும் வகை யில் 3,000 சதுரடி பரப்பளவு கொண்ட இடத் தில் 1,000 சதுரடி பரப்பளவில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம் அமைய பெற்றுள்ளது. மணிமண்டபத்துக்கு நாள் தோறும் பொதுமக்கள் வருகை தந்து கவிஞருடைய அரிய புகைப்படங்களை பார்வையிட்டு செல்கின்றனர். கவிஞரின் பாடல்களும் தொடர்ந்து ஒலி பரப்பப்பட்டு வருகிறது.மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய குறிப்பேடு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கவிஞரின் அரிய புகைப்படங்கள் இன்னும் கூடுதலாக வைப்பதற்கும், அவருடைய பாடல்கள் அடங்கிய புத்தகங்களை காட்சிக்கு வைப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மண் டபத்தின் நுழைவு வாயிலில் புதிதாக பெரியளவில் மணிமண்டபத்தின் பெயர் பலகை வைக்கவும், சிறிய நூலகம் அமைத்து பொதுமக்கள் படிப்பதற்கு கட் டிடம் கட்டுவதற்கு விரை வில் அரசுக்கு திட்ட மதிப் பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்படும். மேலும் மண்டபத்தின் வெளிப்புற வளாகத்தில் சிமென்ட்டாலான நிழற்குடை அமைத்து வாசகர்கள் படிப்புக்கு வசதி செய்து கொடுக்கப்படும். கவிஞரின் பாடல்களை டிஜி ட்டல் முறையில் தொடர்ந்து ஒலிபரப்ப நவீன கருவிகள் பொருத்தப்படும் என்றார். 
பட்டுக்கோட்டை தாசில்தார் பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன் உடனிருந்தனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில்கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் பொதுமக்களின் கருத்து பதிவு செய்ய குறிப்பேடு கலெக்டர் தகவல்”