முத்துப்பேட்டை அருகே சாலையில் தேங்கிய தண்ணீரில் நீச்சலடித்து நூதன போராட்டம்

Posted December 22, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி பாமணி ஆற்று பாலத்திலிருந்து மேலநம்மங்குறிச்சி கிராமம் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களி லும், இரவு நேரங்களிலும் அவ்வழியாக சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது.மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமை த்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சாலையை
பார்வையிட்டு சென்ற அதிகாரிகளும் இதுவரை எந்த எடுக்கவில்லை.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழை யால் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள் ளது. நேற்று அப்பகுதி இளைஞர்களும், மாணவர்களும் நூதன முறையில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூதன முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இனியும் அதிகாரிகள் அலட்சியப் படுத்தினால் அடுத்தகட்டமாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரை நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்றனர்
.நன்றி தமிழ்முரசு


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே சாலையில் தேங்கிய தண்ணீரில் நீச்சலடித்து நூதன போராட்டம்”