அதிரை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மீனவர் சாவு
Posted December 24, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மினவர் இறந்தார் அதிராம்பட்டினம் காந்தி நகர் கிராமத்ததைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகன் காளிதாஸ் வயது (42) இவரும் இவரது மகன் காளிகுமார் வயது(20) மற்றும் வீரமாகாளி வயது(50) காமராஜ் வயது(20) ஆகிய நால்வரும் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர் இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காளிதாஸ் எதிர்பாராத விதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார் இதையடுத்து சக மினவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் இருந்தும் அவர் இறந்தார் இதனையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்தனர் புகாரின்
பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
படங்கள் காளிதாஸ்

0 comment(s) to... “அதிரை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மீனவர் சாவு”