முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
Posted December 28, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
மாநாட்டில், முத்துப்பேட்டை பகுதியில் அனை த்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை உடன் நிரப்ப வேண்டும். முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் பழுது அடைந்த சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் வாழும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் அரசு பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். முத்துப்பேட்டை பகுதியில் நீர் நிலைகளை தூர்வாரி வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை பணியை உடனடியாக துவக்க வேண்டும். முத்துப்பேட்டை தனி தாலுக்கா வாக அறிவிக்கப்பட்டதை செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு 150 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக சம்பளம் உயர்வு அளிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செம்பியமங்களம் ஊராட்சி தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் நீலமோகன், சிவசாமி, மாநாடு தலைவர் யோகநாதன், பொருளாளர் மந்திரமூர்த்தி, துணைத் தலைவர் மார்க்ஸ், துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்-இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்”