முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(30). பைக் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முதுகளத்தூரிலிருந்து நாகை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்
மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, நேற்று காலை தஞ்சை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றினர். அப்போது அவர் இறந்தார். பலியான செந்தில்குமாருக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. விபத்து குறித்து எடையூர் எஸ்ஐ செல்வராஜ், ஏட்டு பாஸ்கர் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சூசைமுத்து, கண்டக்டர் கணேசன் ஆகியோரை கைது செய்தனர்
.நன்றி தினகரன்