முத்துப்பேட்டையில்தினமும் லாரிகளிலிருந்து பள்ளிகளின் அருகே சாலையில் கொட்டப்படும் இறால் கழிவுகள்! தொற்றுநோய் பரவும் அபாயம்.

Posted December 19, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளன. அப்பகுதியில் பிடிக்கப்படும் இறால்களை சிறிய வாகனங்களின் மூலம் சுற்று புற கிராமங்களிலிருந்து சேகரித்து எடுத்து வரப்பட்டு முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள கோவிலூர் பைப்பாஸ் பஸ் ஸ்டான்ட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இறால் ஏஜன்ட்களின் மெகா சைஸ் லாரிகளில் கொள்முதல் செய்து ஏற்றப்படுகிறது. தினமும் போக்கு வரத்துக்கும,; பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும்
வகையில் இந்த இறால் கொள்முதல் தினமும் நடைபெற்று வருகிறது. அப்பொழுது கொண்டு வரும் இறால்களை அங்கேயே தரம் பிரிக்கப்பட்டு அதன் கழிவுகளையும், வீணாகும் நிலையில் உள்ள இறால்களையும் அப்பகுதி சாலை ஓரங்களில் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் இறால் கழிவுகள் குவியல் குவியலாக ஆங்காங்கே கொட்டி சிதறி கிடக்கிறது. தினமும் அதில் பன்றிகளும் மேற்கிறது. இங்கு கொட்டப்படும் இறால் கழிவுகள் நாளடைவில் அதிலிருந்து புழுக்கள் ஏற்பட்டு ஒரு வகை துர்நாற்றமும் வீசுவதால் அப்பகுதியில் செல்பவர்கள் மூக்கைபிடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இதன் அருகே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதற்கு செல்லும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் இந்த துர்நாற்றத்தை சுவாசித்து செல்வது மூலம் இவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் மற்றும் பல்வேறு உடல் நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை பள்ளிகள் நிர்வாகமும் கண்டுக்கொள்வது கிடையாது. இதன் அருகே அரசு அலுவலகங்கள் இருந்தும் இப்பகுதியில் பல உயர் அதிகாரிகள் தினமும் சென்று வந்தும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ப்தியில் உள்ளனர். இந்த செயலைத் தடை செய்து தடுத்து நிறுத்திடவும், இப்பகுதியை சுத்தம் செய்து சுகாதாரமான பகுதியாக மாற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி படம் செய்தி:நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை





0 comment(s) to... “முத்துப்பேட்டையில்தினமும் லாரிகளிலிருந்து பள்ளிகளின் அருகே சாலையில் கொட்டப்படும் இறால் கழிவுகள்! தொற்றுநோய் பரவும் அபாயம்.”