தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு(படங்கள் இணைப்பு)
Posted December 20, 2014 by Adiraivanavil in Labels: தஞ்சை
சிவன்கோவில்களில் மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சிறப்புமிக்கது ஆகும். ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் அது ஆண்டு முழுவதும் கோவில் சென்று சாமி தரிசனம் செய்த பலனை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள்.
தஞ்சை பெரியகோவிலில் மார்கழி மாதத்துக்கான பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது
தஞ்சை பெரியகோவிலில் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பிரதோஷ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பெரிய நந்திக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் ரிஷபவாகனத்தில் சிவன்– பார்வதி எழுந்தருளி கோவிலை வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்
0 comment(s) to... “தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு(படங்கள் இணைப்பு)”