முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். த.மு.எ.ச மாநாட்டில் தீர்மாணம்.

Posted December 12, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 3-வது கிளை மாநாடு நடந்தது. கிளை தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் உலகநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வேதரத்தினம் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் செல்லத்துரை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆறுமுகம் வரவு, செலவு கணக்கு வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக
மாநில நிர்வாகி கவிஞர் புகளில் பேசினார்கள். இதில் புலவர் நாச்சிக்குளத்தார், எழுத்தாளர் உதயை.மு.வீரய்யன், கவிஞர் இளைய சாகுல் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டகளப்பிரன், எழுத்தாளர் உதயை.மு.வீரய்யன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் ராஜ்மோகன், விவசாய சங்க செயலாளர் முருகைய்யன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் கணகசுந்தரம், மாதர் சங்க நிர்வாகிகள் தேவி, சாந்தி ஆகியோர் பேசினார்கள். துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் சுபசிதம்பரம், கணக ராஜ், கலா ஆகியோர் தீர்மாணங்கள் முன்மொழிந்தனர். கவிஞர்கள் சித்தமல்லி ராஜா, செல்லைய்யன், ரேனுகா ஆகியோர் பல்வேறு தலைப்து. இதில் அரசு செம்மொழி வாரம் கொண்டாட ஆணை வழங்க வேண்டும். கல்லூரி வரை தமிழ் பாடம் கட்டாயமாக்க வேண்டும். வங்கி மூலம் நேரடி மாணியம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரேசன் கடைகளில் அத்தியவசிய பொருள்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை உடன் துவக்க வேண்டும். முத்துப்பேட்டையை தனித்தாலுக்காவாக அறிவிக்க பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும். உட்பட 12 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் கணபதி நன்றி கூறினார்

.படம் செய்தி:நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். த.மு.எ.ச மாநாட்டில் தீர்மாணம்.”