அதிரையில் சுனாமி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு

Posted December 26, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் சுனாமி 10 ம்ஆண்டு நினைவு தினமான இன்று விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது இதில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் இமாம் ஷாபி பள்ளி மாணவ மாணவியர்,

பேருராட்சி மன்ற தலைவர் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, நகர அதிமுக துணைச்செயலாளர் தமீம், கவுன்சிலர்கள் சேனாமுனா (அரசு உயர்நிலைப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர்), அபுதாஹிர், சமூகஆர்வலர்கள் மற்றும் அதிரை வானவில், அதிரை பிறை, அதிரை எக்ஸ்பிரஸ், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட ஊடக நிருபர்களும் காந்திநகர், கரையுர்தெரு மீனவர்களும் பொதுமக்களும் மற்றும் அரசு அலுவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர் இதில் பட்டுக்கோட்டை கோட்டாச்சியர் பேரணியை துவக்கி வைத்து சுனாமியில் இருந்து நம்மை பாதுகாத்துக் எப்படி கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்கள் குறித்து உரையாற்றினார் இப்பேரணி வண்டிப்பேட்டையிலிருந்து அதிரை பேருந்துநிலையம் வரை வந்தடைந்தது.












0 comment(s) to... “அதிரையில் சுனாமி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு”