தமிழகத்தில் மின் கட்டணம் 15% அதிகரிப்பு: 94% பேருக்கு பாதிப்பில்லை என அரசு தகவல்
Posted December 11, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்
இதனிடையே, நடப்பாண்டு ரூ. 6854 கோடி அளவுக்கு மின்வாரியம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், மின்கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. இது தொடர்பாக சென்னை, நெல்லை மற்றும் ஈரோட்டில் கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்கும் 15 சதவீத மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை கமிஷன் இன்று அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (டிசம்பர் 12) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக அரசு விளக்கம்:
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதலா ரூ. 1310.23 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 94 சதவீத மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டணங்கள் வருமாறு
வீடுகளுக்கு 1 முதல் 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 40 காசு உயர்வு
101 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 45 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட் வரை
முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 50 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு 60 காசு உயர்வு
500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
தொழிற்சாலை யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
வணிக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்வு
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.85 உயர்வு
நெசவாளர்களுக்கு சலுகை:2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை.
கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த தேவையி்ல்லை.100யூனிட்டுக்கு.மேல் பயன்படுத்தினால், வீடுகளுக்கான மின் கட்டணமே வசூலிக்கப்படும்.நன்றி தினமலர்
0 comment(s) to... “ தமிழகத்தில் மின் கட்டணம் 15% அதிகரிப்பு: 94% பேருக்கு பாதிப்பில்லை என அரசு தகவல்”