அதிரை அருகே கடலை சாகுபடிக்கு மழை விட்டுக்கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Posted December 28, 2014 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கடை மடை பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே போதுமான மழையின்றி, மேட்டூர் அணை தண்ணீரும் போது மான அளவு கிடைக்காமல் அதிகளவு நெல் சாகுபடியை தவிர்த்து மேடான பகுதிகளில் விவசாயிகள் கடலை சாகுபடி செய்து வந்தனர். மார்கழி பட்டம் கடலை சாகுபடி இரு மடங்கு மக சூலை தரும் என்பதால், பெரும்பாலான
விவசாயிகள் மார்கழி பட்டமே கடலை சாகுபடி செய்து வழக்கம். ஆனால் கடந் தாண்டு போதுமான மழை இல்லாததால் மார்கழி பட் டம் கடலை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
ஆனால் அதற்கு எதிர்மாறாக இந்தாண்டு மார்கழி பட்டம் கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தயா ராகி வந்தனர். திடீரென மார்கழி மாதம் முதல் வாரத்தில் கடை மடை பகுதியில் கனமழை பெய்து, கடலை சாகுபடி செய்யக்கூடிய நிலப்பரப்புகளில் தண்ணீர் தேங்கி, அதிகளவு ஈரப்பதத்தை ஏற்படுத்தி சாகுபடி தேக்கமடைந்தது. கடந்த ஒரு வாரமாக கடைமடையில் மழையின்றி இருந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் இலங்கை அருகே புயல் சின்னம் உரு வாகி இருப்பதால் வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக உள் ளது. புயல் சின்னம் கார ணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால், கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மீண்டும் மழை பெய்தால் ஈரப்பதம் காய்வதற்கு 15 நாட்களுக்கு மேல்ஆகும். எனவே மார் கழி பட்ட கடலை சாகுபடிக்கு மழை விட்டுக்கொடுக்குமா? என கடைமடை விவசாயிகள் கவலையோடு எதிர்பார்த்துள்ளனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆனால் அதற்கு எதிர்மாறாக இந்தாண்டு மார்கழி பட்டம் கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தயா ராகி வந்தனர். திடீரென மார்கழி மாதம் முதல் வாரத்தில் கடை மடை பகுதியில் கனமழை பெய்து, கடலை சாகுபடி செய்யக்கூடிய நிலப்பரப்புகளில் தண்ணீர் தேங்கி, அதிகளவு ஈரப்பதத்தை ஏற்படுத்தி சாகுபடி தேக்கமடைந்தது. கடந்த ஒரு வாரமாக கடைமடையில் மழையின்றி இருந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் இலங்கை அருகே புயல் சின்னம் உரு வாகி இருப்பதால் வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக உள் ளது. புயல் சின்னம் கார ணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால், கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மீண்டும் மழை பெய்தால் ஈரப்பதம் காய்வதற்கு 15 நாட்களுக்கு மேல்ஆகும். எனவே மார் கழி பட்ட கடலை சாகுபடிக்கு மழை விட்டுக்கொடுக்குமா? என கடைமடை விவசாயிகள் கவலையோடு எதிர்பார்த்துள்ளனர்.

நன்றி தினகரன்


0 comment(s) to... “அதிரை அருகே கடலை சாகுபடிக்கு மழை விட்டுக்கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு”