முத்துப்பேட்டை அருகே வேலித்தகராறில் தாய், மகனுக்கு அடி-ஒருவர் கைது

Posted December 16, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை அருகே வேலித்தகராறில் தாய், மகனை கட்டையால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் அரவிந்தன்(26). இவருக்கும், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் தட்சிதானந்தம் மகன் ரமேஷ்(37) என்பவருக்கும் நீண்டநாட்களாக வேலித் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் ரமேஷ், அரவிந்தனிடம் சீக்கிரமாக அளந்து வேலியை வைக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அரவிந்தனை தாக்கினார். இதனை அருகில் நின்றிருந்த அரவிந்தனின் தாய் சித்ரா தடுத்தபோது அவரையும் கட்டையால் அடித்தார். இதில் இருவரும் காயமடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே வேலித்தகராறில் தாய், மகனுக்கு அடி-ஒருவர் கைது”