அதிரையில் முதன்முறையாக மகர தீபம் மற்றும் பொது பஜனை நடைபெற்றது (அதிக படங்கள் இணைப்பு)
Posted December 18, 2014 by Adiraivanavil in Labels: அதிரை பொது பஜனை
அதிராம்பட்டினத்தில் முதலாம் ஆண்டு அய்யப்பசாமி பக்தர்கள் மற்றும் முருகன் சாமி பக்தர்கள் இணைந்து நடத்திய மகரஜோதி தீபம் மற்றும் பொது பஜனை நடைபெற்றது இதில் வண்டிப்பேட்டை அய்யப்பன் ஆலயததிலிருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தீபம் ஏற்றி அங்கிருந்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் வந்தடைந்தனர் பிறகு அங்குள்ள விநாயகர் அய்யப்பன் முருகன் ஆகிய சுவாமிகளுக்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டனர் இதனையடுத்து வெளியுரிலிருந்து பக்தர்கள் வருகைதந்தனர் அனைத்து பக்தர்களும் பஜனையில் கலந்துகொண்டனர் இதனைத்தொடர்ந்து அன்னதாமும் நடைபெற்றது. இதில் அனைத்து பக்தர்களும் ஒன்றிணைந்து கலந்து கொள்வது அதிரையில் இதுவே முதன்முறையாகும்.
0 comment(s) to... “அதிரையில் முதன்முறையாக மகர தீபம் மற்றும் பொது பஜனை நடைபெற்றது (அதிக படங்கள் இணைப்பு)”