முத்துப்பேட்டை அடுத்த தோலி ஊராட்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள காரைக்கான்வெளி ஏரியை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணி துவக்கம் நிகழ்ச்சி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின்
கீழ் ஏரியை சுத்தம் செய்யும் பணியை பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். இந்த பணியில் பா.ஜ.க பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர் குமார், கிளைத் தலைவர் சிவா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள், பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள்; கலந்துக்கொண்டனர்.
படம் செய்தி
:நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை