அதிரை அருகே கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பியதால் நடவுப்பணிகள் துவக்கம்

Posted December 22, 2014 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே கடைமடை பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மழையின்றி ஏரி, குளங்கள் நிரம்பாமல் நிலங்கள் அனைத்தும் சாகுபடியின்றி தரிசாக கிடந்தது. இந்தாண்டு கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த
மழையில் 1,000 ஏக்கருக்குமேல் பாசனம் தரக்கூடிய நாடியம், ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், கொரட்டூர், ரெட்டவயல் போன்ற பெரிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. இருப்பினும் விவசாயிகள் நாற்றுவிடும் பணிகளை முடித்திருந்தனர். ஒரு சில விவசாயிகள் நேரடி விதைப்பு செய்திருந்தனர்.
சாகுபடி நடைபெறுமா என்ற கவலையுடன் இருந்த ஏரி பாசன விவசாயிகளுக்கு கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பி வடிகால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கடைமடை விவசாயிகள் உடனடியாக நடவு பணிகளை துவக்கியுள்ளனர். நேரடி விதைப்பு செய்திருந்த விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு உரமிடும் பணிகளை செய்து வருகின்றனர்
.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை அருகே கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பியதால் நடவுப்பணிகள் துவக்கம்”