தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்த தம்பதி-பரபரப்பு
Posted December 12, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்
கோவில்பட்டியில் தங்கப்புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு தம்பதியை ஏமாற்றிய கோவில் பூசாரி உட்பட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவில்பட்டி வள்ளுவர்நகரை சேர்ந்தவர் மருதுபாண்டி(28). அங்குள்ள உமையம்மாள் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த ராஜம்(30) இருந்தார். இந்த கோவிலுக்கு கோவில்பட்டி புதுக்கிராமம் ஓடைத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மனைவி
காளீஸ் வரி(32) சாமி கும்பிட சென்று வந்தார்.
காளீஸ் வரி(32) சாமி கும்பிட சென்று வந்தார்.
இதனால் பூசாரிக்கும், காளீஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 8 மாதத்திற்கு முன்பு கோயிலுக்கு சென்ற காளீஸ்வரியிடம், தங்களிடம் உள்ள 2 பித்தளை பானை களில் தங்க காசுகள் இருப்பதாகவும், தொடர்ந்து 2 மாதங்கள் பூஜை நடத்தினால் தங்க காசுகள் கிடைக்கும் என்றும் பூஜைகள் நடத்த ரூ.2 லட்சம் தந்தால் தங்கப்புதையல் உள்ள பித்தளை பானைகளை தருவதாகவும் மருது பாண்டியும், ராஜமும் தெரிவித்தனர்.
இதையடுத்து காளீஸ்வரியும், அவரது கணவர் கருப்பசாமியும் கோயி லுக்கு சென்று ரூ.2 லட்சம் கொடுத்தனர். இதையடுத்து தம்பதி முன்பு பூசாரி பூஜைகளை நடத்தினார். ஆயினும், பூசாரி கூறியதுபோல் தங்கப் புதையல் அடங்கிய பித்தளை பானைகளை அவர்களுக்கு கொடுக்கவில்லை.
இதுகுறித்து கருப்பசாமியும், காளீஸ்வரியும் கேட்டபோது, தங்கப்புதையல் வேண்டும் என்றால் மீண்டும் பூஜை நடத்த வேண்டும் என்றும், அதற்கு மேலும் ரூ.3 லட்சம் செலவாகும் எனவும் பூசாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூசாரியிடம் மேலும், ரூ.3 லட்சத்தை கொடுத்தனர். ஆனால், தங்கப்புதையல் கொண்ட பித்தளை பானைகளை கொடுக்காமல் அவர் ஏமாற்றினார். இதுகுறித்து தம்பதியர் பூசாரியிடம் கேட்டபோது, �மேலும் ரூ.1 லட்சம் தந்தால்தான் பூஜை நடத்தி தங்கப்புதையலை வெளியில் கொண்டு வரமுடியும் என தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த தம்பதியர் தங்கப்புதையல் வேண்டாம், நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பித்தருமாறு பூசாரியிடம் கேட்டனர்.
தலைமறைவான 2 பேருக்கு வலை
கோவில்பட்டி தம்பதியிடம் தங்க காசுகள் இருப்பதாக கூறி மோசடி செய்த கோயில் பூசாரி கொடுத்த மணல் நிரப்பிய பித்தளை பானைகள்.
இதனை ஏற்க மறுத்த தம்பதியர் தங்கப்புதையல் வேண்டாம், நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பித்தருமாறு பூசாரியிடம் கேட்டனர்.
இதையடுத்து தங்கக்காசுகள் இருப்பதாக கூறப்பட்ட 2 பித்தளை பானைகளின் வெளிப்புறத்தில் பட்டு துணிகளை கட்டி சந்தனம், குங்குமம் பூசி, பூக்கள் சுற்றி பயபக்தியுடன் தம்பதியிடம் கடந்த 2ம் தேதியன்று பூசாரி மருதுபாண்டி கொடுத்தார். மேலும் உடனடியாக திறந்தால் தங்கப்புதையல் கிடைக்காது என்றும், 10ம் தேதி பானைகளை திறக்குமாறும் கூறி அனுப்பி வைத்தார்.
பூசாரி கூறியதுபோல் நேற்று முன்தினம் (10ம் தேதி) கருப்பசாமியும், அவரது மனைவியும் வீட்டில் வைத்து 2 பித்தளை பானைகளையும் ஆசையுடன் திறந்து பார்த்தனர். ஆனால் 2 பானைகளிலும் மணல் நிரப்பப்பட்டிருப்பது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கோவில் பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் காளீஸ்வரி புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள பூசாரி மருதுபாண்டி, உதவியாளர் ராஜம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.நன்றி தினகரன்
0 comment(s) to... “தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்த தம்பதி-பரபரப்பு”