அதிரை அருகே மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Posted December 25, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரை அருகே உள்ள மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதுதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கான மீன்பிடி துறைமுகங்கள் இருந்து வருகிறது. இதில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தி விரிவுப்படுத்தி தரவேண்டுமென மீனவர்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.தற்போது மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத் தை ரூ.60 கோடியில் விரிவாக்கம் செய்ய அரசு அனு மதி அளித்துள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை சுற்றி கடல்நீர் வற்றிய புறம்போக்கு நிலங்களில் மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்டி தொழில் செய்து வந்தனர். துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கு இந்த கட்டிடங்கள் இடையூறாக இருந்தது. இதனால் நேற்று காலை நாகப்பட்டிணம் மீன்வளத்துறை செயற்பொறியாளர் அண்ணாமலை, தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, பட்டுக்கோட்டை மீன்பிடி துறைமுக உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், பட்டுக்கோட்டை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் யுவராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் கதிரேசன் முன்னிலையில் 2 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பட்டுக்கோட்டை ஏஎஸ்பி தீபாகாணிக்கேர் தலைமையில் சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உட்பட 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகே மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்புகள் அகற்றம்”