முத்துப்பேட்டையில் பாலசந்தர் பணியாற்றிய பள்ளியில் மவுன அஞ்சலி

Posted December 25, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டையில் கே.பாலசந்தர் பணியாற்றிய அரசு பள்ளியில் நேற்று மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் 1959ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்கள் மத்தியிலும், இப்பகுதி மக்கள் மத்தியிலும் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்தார்.இந்நிலையில் நேற்று அவர் பணியாற்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரது
படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ் மோகன் தலைமையில் நடைபெற்றது. பலரும் இரங்கல் தெரிவித்து பேசினர். மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் த.மு.எ.ச நிர்வாகி சுப.சிதம்பரம், தெற்கு காடு கிராம நிர்வாகி சதீஸ் குமார், ஆசிரியர்கள் சஞ்சய், ராஜாராம், ஆசிரியைகள் கலைச்செல்வி, ஆயிஷா பர்வீன், தெய்வானை உட்பட பலர் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன்








திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நல்லமாங்குடியில் இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்து வளர்ந்த வீடு





0 comment(s) to... “முத்துப்பேட்டையில் பாலசந்தர் பணியாற்றிய பள்ளியில் மவுன அஞ்சலி”