அதிரைஅருகே (படகு இன்ஜின் பழுது )நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 3 பேர் மீட்பு

Posted December 17, 2014 by Adiraivanavil in Labels:
அதிரைஅருகேஉள்ள மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் மணி (50), முனுசாமி(45), ஆலபர்ட்லியோ(25). இவர்கள் 3 பேரும் கடந்த 14ம்தேதி இரவு 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி தளத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 15 நாட்டிகல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப்படகில் உள்ள இன்ஜின் பழுதாகிவிட்டது. உடனே மீனவர்கள் செல்போன் உதவியுடன் 1093 கடலோர பாதுகாப்பு
குழும அவசர அழைப்பு எண்ணில் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மணமேல்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ரகுபதி மற்றும் போலீசார் உதவியுடன் ரோந்து படகின் மூலம் இரவில் தேடும் பணியில் ஈடுபட்டனர், இரவு முழுவதும் கடலில் தேடி அதிகாலை 5 மணி அளவில் கடல் அலையில் குளிரிலும் சிக்கி தவித்துக்கொண்டிருந்த மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் பத்திரமாக மீட்டு கோட்டைப்பட்டினம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்திற்கு கொண்டு வந்தனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “அதிரைஅருகே (படகு இன்ஜின் பழுது )நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 3 பேர் மீட்பு”