மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை
Posted December 13, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப் பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியது.
பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை கூட்டம் நடந்தது. கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரத்தினம், கோவிந்தராஜ், நாகநாதன் முன்னிலை வகித்தனர். மதுக்கூர் முக்கூட்டு நான்குவழி சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் நான்கு புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். அதேபோல் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி முன்பாகவும் வேகத்தடை அமைக்க வேண்டும். நகரில் ஒரு வழிச்சாலை இருந்தும் பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் விதியைமீறி மெயின் சாலை யில் செல்வ தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காவல் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகிற சூழலில் போதிய மருத்துவர், செவிலியர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமித்து நாய் கடி, பாம்பு கடிக்கு தேவையான அத்யாவசிய மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மதுக்கூர் சிவக்கொல்லை அருகில் உள்ள புதுக்குளத்தை மராமத்து செய்து நீர் நிரப்பித்தர வேண்டும். மதுக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து பெரமையா கோயில் வரை சாலையின் இருபுறமும் மணல் நிறைந்து இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. விபத்து ஏற்படும் முன்பாக தேங்கி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அய்யாவு, பெரமையன், சோமு, சிதம்பரம், குமரவேல், ராஜேந்திரன், கணேசன், ரவி, தங்கராஜ், அறிவுமதி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை”