அகல ரயில் பாதை பணியை துவங்காவிட்டால் போராட்டம்-மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் பேட்டி

Posted December 15, 2014 by Adiraivanavil in Labels:
திருவாரூர்& காரைக்குடி அகல ரயில் பாதை பணியை துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் இரண்டாவது முறையாக மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த
கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் 6 மாதம் நிறைவில் ஏழை மக்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தாமல் பெரிய முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. மருத்துவ பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளது. புற்றுநோய் மருந்தின் ஒன்றின் விலை ரூ.8,500ல் இருந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தியுள்ளது. அதேபோல் 108 வகை முக்கிய மருந்துகளுக்கு பலமடங்கு விலை அதிகரித்துள்ளது.
நேதாஜி இறப்பில் ரகசிய ஆவணம் உள்ளதாக மோடி அரசு கூறியுள்ளது. காந்தி, நேரு போன்ற தலைவர்களை போல ஒருவர் தான் நேதாஜி. அதை வெளிப்படையாக வெளியிட வேண்டும். நிதி பற்றாக்குறை என்று கூறி ரயில்வே துறை பல்வேறு ரயில்களை நிறுத்தியுள்ளது. திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணியை உடனடியாக துவங்க வேண்டும். அதேபோல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம் பள்ளி வரை உள்ள ரயில்வே பணியை உடனடியாக துவக்க வேண்டும். இந்த பணியை செய்யாமல் ரயில்வேதுறை காலத்தாமதம் செய்தால் அனைத்து பகுதி மக்களையும் ஒன்று திரட்டி மனிதநேய மக்கள் கட்சி தொடர் போரட்டங்களில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அமைப்பு செயலாளர் மவுலானா அசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல், வழக்கறிஞர் தீன் முகம்மது, ஒன்றிய தலைவர் நைனாமுகம்மது, நகர தலைவர் சம்சுதீன் உடனிருந்தனர்.
நன்றி தினகரன் 


0 comment(s) to... “அகல ரயில் பாதை பணியை துவங்காவிட்டால் போராட்டம்-மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் பேட்டி”