கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்
Posted December 17, 2014 by Adiraivanavil in Labels: வெளிமாநில செய்திகள்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரேலியில் அராஜ் என்ற அந்த மாணவன் கல்வி கட்டணம் செலுத்தவில்லை, வீட்டுப்பாடங்களையும் ஒழுங்காக செய்யவில்லை என்று கூறி அவனை ஆசிரியர் அடித்துக்கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரியான எம்.பி.சிங் கூறுகையில்;
இன்று காலை 11 மணியளவில் பாலகன் அராஜின் தலையை வகுப்பறையில் உள்ள சுவரில் ஆசிரியர் மோதியுள்ளார். இதில் மாணவனின் மூக்கு வழியே ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. இதையடுத்து அவனை பள்ளி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவனது பெற்றோருக்கு போன் செய்த அவர்கள் அவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
மருத்துவமனைக்கு பெற்றோர் சென்று பார்த்தபோது, அராஜ் சுயநினைவின்றி இருந்துள்ளான். சிறிது நேரத்தில் அவன் இறந்துவிட்டான். மாணவனுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அதில் தலையில் படுகாயமடைந்ததால் மரணம் நிகழ்ந்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்குள்ள காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
0 comment(s) to... “கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்”