முத்துப்பேட்டையில்ஆதார் அட்டை முகாம்அலுவலர்கள் வராததால் மக்கள் ஏமாற்றம்
Posted December 12, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் ஆதார் அட்டை முகாமுக்கு அலுவலர்கள் வராததால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று வருவாய் துறை சார்பில் விடுபட்ட பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பள்ளிக்கு வந்து பலமணிநேரம் நேரம் காத்து இருந்தனர். அதிகாரிகள், அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேரம் கழித்து பொதுமக்களுக்கு சந்தேகம் வந்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆதார் அட்டை மெஷின் பழுது அடைந்து விட்டது. மெஷின் திருச்சியிலிருந்து வார காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நாளை (இன்று) முகாம் நடக்கும் என்று கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் பல மணி நேரம் காத்து இருந்து வீடு திரும்பினர்நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில்ஆதார் அட்டை முகாம்அலுவலர்கள் வராததால் மக்கள் ஏமாற்றம்”