முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி

Posted December 25, 2014 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு தினங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின் தடையால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை வரை முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தும,; வியாபார நிறுவனங்கள் இயங்காத நிலைக்கு
தள்ளப்பட்டது. மின்சார வாரியத்தைத் தொடர்பு கொண்டு பலரும் கேட்ட போது அதிகாரிகள் முறையான பதில்கள் தெரிவிக்காததால் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை முத்துப்பேட்டை நகரம் முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டதால் நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆதார அட்டைக்காக புகைப்படங்கள் எடுக்கும் பணி இந்த மின்தடையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆதார அட்டை எடுக்க முடியாமல் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ஆதார அட்டை எடுக்கும் பகுதி மக்கள் கூட்டம் இல்லாமால் வெறிச்சோடி காணப்பட்டது

படம் செய்தி :நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி”