அதிரையில்பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல்

Posted December 28, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் சூடு பிடித்து உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்,ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் என பல பிரிவுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிரையில் 21 வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் இன்று காலை லாவண்யா திருமண மணடபத்தில் அதிமுக தலைமையகம் நியமனம் செய்த தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது.இதற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளால் தெருவிக்கபட்டது.    இதேபோல,
தஞ்சாவூர் மாநகராட்சி கோட்டைப் பகுதியில் உள்ள 13 வார்டுகளுக்கு வடக்கு வீதி சுப்பிரமணியப் பத்தர் திருமண மண்டத்திலும், கீழவாசல் பகுதியில் உள்ள 13 வார்டுகளுக்கு மக்கள் மன்றத்திலும், மருத்துவக் கல்லூரி 13 வார்டுகளுக்கு சண்முகா நகர் கூட்டுறவு கட்டத்திலும், தஞ்சாவூர் வடக்கு ஒன்றியத்துக்கு மேலவீதி பங்காரு காமாட்சி திருமண மண்டபத்திலும், தஞ்சாவூர் தெற்கு ஒன்றியத்துக்கு பொன்மணி திருமண மண்டபத்திலும், ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத்துக்கு வீர ரத்தின மஹாலிலும், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர். திருமண மண்டபத்திலும், திருவோணம் ஒன்றியத்துக்கு கே.ஆர். திருமண மண்டபத்திலும், பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு லெட்சுமிப்பிரியா திருமண மண்டபத்திலும், மதுக்கூர் ஒன்றியத்துக்கு வி.பி.ஏ. திருமண மண்டபத்திலும், பேராவூரணி ஒன்றியத்துக்கு விநாயகா திருமண மண்டத்திலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்கு மினிபாலா திருமண மண்டபத்திலும், பட்டுக்கோட்டை நகரத்துக்கு பிரவீன் திருமண மண்டத்திலும், வல்லம் பேரூராட்சிக்கு பி.ஏ.எஸ். திருமண மண்டபத்திலும், ஒரத்தநாடு பேரூராட்சிக்கு எம்.ஆர். திருமண மண்டபத்திலும், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு லாவண்யா திருமண மண்டபத்திலும், பெருமகளூர் பேரூராட்சிக்கு சி.பி. விழா அரங்கத்திலும், மதுக்கூர் பேரூராட்சிக்கு வி.பி.ஏ. திருமண மண்டபத்திலும், பேராவூரணி பேரூராட்சிக்கு ஏகா விழா அரங்கத்திலும் தேர்தல் நடைபெற்றது.   







0 comment(s) to... “அதிரையில்பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் ”