பட்டுக்கோட்டையில் பறக்கும் படை அதிரடிவிதிமுறை மீறியதால் 8 தனியார் உர மையத்தின் விற்பனை முடக்கம்
Posted December 13, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் உர விற்பனை மையங்களிலும் உர விற் பனை மேற்கொள்ளப்படுகிறதா என்று பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் சேகர் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள 6 உர விற்பனை மையங்கள். அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி
பகுதிகளில் உள்ள 5 உர விற்பனை மையங்கள், நாட்டுச் சாலையில் 2 மையங்கள். கரம்பயம் மற்றும் பட்டுக்கோட்டையில் உள்ள 2 உர விற் பனை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உர உரிமத்தில் �ஓ� படிவம் மேற்சேர்க்கை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, விற்பனை நிலையங்களில் விளம்பர பலகையில் விற்பனை விலை எழுதி வைக்கப்பட்டுள்ளதா, உர இருப்புகள் மற்றும் விற்பனை விபரங்கள் உடனுக்குடன் கழி த்து காட்டப்பட்டுள்ளதா, சில்லரை விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெறப்பட்டுள்ளதா, மொத்த விற்பனை ரசீதில் மொத்த விநியோகஸ்தர் மற்றும் சில்லரை விநியோகஸ்தர் கையொப்பம் இடப்பட்டுள்ளதா மற்றும் சில்லரை விநியோகஸ்தர் உரிமம் எண் எழுதப்பட்டுள்ளதா, மாவட்டத்துக் காக கொள் முதல் செய்யப்பட்ட உரங்கள் வேறுமாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதா அல்லது கடத் தப்பட்டுள்ளதா என்று பல் வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த வகையில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி விதிமுறைகளை பின்பற்றாத பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள 3 உர விற்பனை மைய ங்கள், பெரியகடை தெரு வில் ஒரு மையம் என மொத்தத்தில் நகரத்தில் 4 உர விற்பனை மையங்கள், அதிராம்பட்டினம், தாமரங்கோட்டை, நாட்டுச் சாலை, துவரங்குறிச்சி ஆகிய ஊர் களில் தலா ஒரு உர விற் பனை மையம் என மொத் தம் 8 உர விற் பனை மையங்களில் விதி முறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 8 உர மையங்களின் விற் பனையை ஒரு வாரத்துக்கு முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆய்வில் வேளா ண்மை இணை இயக்குநர் சேகர், வேளா ண்மை உதவி இயக்குநர் பாண்டியராஜன், மதுக்கூர் வேளாண்மை அலுவலர் பாலையன், பட்டுக்கோட்டை வேளா ண்மை அலுவலர் சுபா, பட்டுக்கோட்டை வேளா ண்மை உதவி இயக்குநர் மதியரசன், வேளாண்மை அலு வலர் ஜெகதீஸ்வர், சேதுபாவாசத்திரம் வேளா ண்மை அலுவலர் சாந்தி, பேரா வூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர், வேளா ண்மை அலுவலர் ராணி பங்கேற்றனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் பறக்கும் படை அதிரடிவிதிமுறை மீறியதால் 8 தனியார் உர மையத்தின் விற்பனை முடக்கம்”