அதிரை கடல் பகுதியில் கிழக்கன் மீன் வரத்து அதிகரிப்பு

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கிழக்கன் மீன் வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய துறைமுக பகுதிகளிலிருந்து மீனவர்கள் பைபர் படகில் மீன் இறால் மற்றும் நண்டு பிடிப்பதற்கு செல்கின்றனர். இப்போது
தஞ்சை கடற்பகுதியில் மீன் சீசன் துவங்கி உள்ளதால் மீன், இறால் வரத்து அதிகரித்துள்ளது. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் அதிகளவில் கிழக்கன் மீன்கள் அகப்படுகிறது. இதுகுறித்து மீனவர் சொக்கன் கூறுகையில், மீனவர்கள் வலையில் கிழக்கன் மீன் அதிகளவில் அகப்படுகிறது. நேற்று மீன்பிடிக்க சென்ற படகுகளில் பெரிய வகை கிழக்கன் மீன் அகப்பட்டது. பெரிய கிழக்கன் மீன் 1 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.நன்றி தினகரன் 


0 comment(s) to... “அதிரை கடல் பகுதியில் கிழக்கன் மீன் வரத்து அதிகரிப்பு”