முத்துப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சி தெருமுனை பிரச்சாரம்.

Posted January 22, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவணம் கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சி ஏன்? எதற்கு? என்ற கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் மன்னை வேதபாலா, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் கரையங்காடு சரவணன், துணைச் செயலாளர் செல்லப்பா, சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை
செயலாளர் இடும்பாவணம் கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர் வடுவூர் முருகேசன் ஆகியோர் பேசினார்கள். மேலும் கூட்டத்தில் கரையங்காட்டில் உள்ள ஓ.என்.சி.சி முகாமை காலி செய்ய வேண்டும், கடைத்தெருவில் உள்ள அரசு டாஸ்மார்க்கை அப்புரப்படுத்த வேண்டும், மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் போன்றவைகளை வழியுறுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் மன்னை சரவணன், நகர இளைஞர் பாசறை செயலாளர் மாதவன், மாவட்ட துணைச் செயலாளர் பெருவை வீரசேகர், வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் விளக்குடி அறிவழகன், செந்தூரான், சபரி, நீடாமங்கலம் வாசு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


நன்றி 
படம் செய்தி: 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே நாம் தமிழர் கட்சி தெருமுனை பிரச்சாரம்.”