அதிரை அருகேதடையை மீறி படகு சவாரி சுற்றுலா பயணிகளிடம் வசூல் 2 பேர் கைது

Posted January 23, 2015 by Adiraivanavil in Labels:




அதிராம்பட்டினம் அருகே சுற்றுலா பயணிகளை அனுமதியின்றி படகில் கடலுக்குள் அழைத்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினத்தில் மனோரா சுற்றுலா தலம் உள்ளது. இதனை காண பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.இந்த பகுதிகளில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு படகு சவாரி செய்வதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் டென்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம், அனுமதி ரத்து செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் யாரும் படகு சவாரி செய்வது கிடையாது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வருகைபுரிந்த சுற்றுலா பயணிகள் 6 பேரை மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (42), ராமகிருஷ்ணன் (28) ஆகிய இருவரும் 2 படகுகளில் உயிர் காக்கும் கவசம், லைப் ஜாக்கெட் போன்ற உபகரணங்கள் இன்றி கடலுக்குள் அழைத்து சென்று கட்டணம் வசூலித்தனர்
அப்போது, கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆலோசனையின் பேரில் கடலில் ரோந்து சுற்றிவந்த கடலோர காவல்துறை எஸ்ஐ ஞானசேகரன், எஸ்எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் காவலர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.



0 comment(s) to... “அதிரை அருகேதடையை மீறி படகு சவாரி சுற்றுலா பயணிகளிடம் வசூல் 2 பேர் கைது”